உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஷாகீல் (வயது 55). இவருக்கு 6 குழந்தைகள் உள்ளன. 3 பேரக்குழந்தைகள் உள்ளன.இவருடைய 17 வயது மகனுக்கு, 22 வயது பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு நிச்சயமும் செய்யப்பட்டிருக்கிறது. மகனுக்கு 17 வயதுதான் ஆகிறது. மேலும் பண நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதனால் திருமணத்தை தள்ளிப் போடலாம் என அந்த பையனின் தாயர் உள்ளிட்ட குடும்பத்தினர் கூறியுள்ளனர்.ஆனால் ஷாகீல், தனது 17 வயது மகனுக்கும், 22 வயது பெண்ணிற்கும் திருமணம் செய்து வைப்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக ஷாகீல் வருங்கால மருமகளிடம் போனில் பேசியுள்ளார். இந்த போன் பேச்சு அதிக நேரம் நீண்டு கொண்டே சென்றுள்ளது. இருவருக்கம் இடையில் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
போனில் நீண்ட பேசுவதால் நிச்சயம் செய்யப்பட்ட மகனுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால் தந்தையின் போனை பார்க்கும்போது, வருங்கால மருமகளுக்கு சந்தேகிக்கும் வகையில் மெசேஜ் அனுப்பியதை கண்டுபிடித்துள்ளார்.இது தொடர்பாக குடும்பத்தினர் ஷாகீலிடம் கேட்கும்போது, மகன் திருமணம் குறித்து பேசியதாக சமாளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வேலைக்காக டெல்லி செல்வதாக கூறி, வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். பின்னர் ஒரு சில தினங்கள் கழித்து தனது மனைவிக்கு போன் செய்து, நம்முடைய மகனுக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இதைக்கேட்ட ஷாகீல் மனைவி கடும் அதிர்ச்சி அடைந்ததுள்ளார். மருமகளாக எங்கள் வீட்டிற்கு வர வேண்டியவள், தன்னுடைய வாழ்க்கையில் பங்கு போட்டுவிட்டாளே, என வேதனை அடைந்துள்ளார்.
இது தொடர்பாக போலீசில் புகார் ஏதும் செய்யப்படவில்லை. இதனால் போலீசார் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. சொந்தகாரர்கள் மூலம் இந்த மெதுவாக வெளியில் கசிந்துள்ளது. மகனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை, அவனது தந்தை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.