Home இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சுமூகமாக இடம்பெற்று வரும் தபால் மூல வாக்களிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சுமூகமாக இடம்பெற்று வரும் தபால் மூல வாக்களிப்பு

0
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சுமூகமாக இடம்பெற்று வரும் தபால் மூல வாக்களிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (24) ஆரம்பமாகியதோடு, எவ்விதமான பிரச்சினையும் இல்லாம் வழமை போன்று சுமூகமாக இடம்பெற்று வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இன்றும் ஏப்ரல் 25, 28 மற்றும் 29 ஆகிய திககளிலும் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.அரச நிறுவனங்கள், பொலிஸ், முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் மேற்படி நான்கு நாட்களில் தங்களது தபால் மூல வாக்குகளை பதிவு செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக 648,495 விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version