70 வயது பெண்ணொருவரின் 160,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையடித்த சம்பவத்திற்கு உதவி செய்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் தங்க நகைகளை 30 வயதுடைய காதலன் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளதாக அனுராதபுரம் – வாஹல்கட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த திருட்டு சம்பவத்திற்கு உதவி செய்த நபரையே தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாஹல்கட பிரதேசத்தில் குளத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுபவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாஹல்கட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.