Home இலங்கை கிளிநொச்சியில் 16 சிறுவர்களை சீரழித்தவருக்கு மீண்டும் விளக்கமறியல்

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை சீரழித்தவருக்கு மீண்டும் விளக்கமறியல்

0
கிளிநொச்சியில் 16 சிறுவர்களை சீரழித்தவருக்கு மீண்டும் விளக்கமறியல்

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை சீரழித்த உடற்பயிற்சி ஆசிரியர் மீண்டும் விளக்கமறியல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சந்தேக நபர் கிளிநொச்சி பாடசாலை ஒன்றின் சிற்றூழியராக பணியாற்றும் விளையாட்டு துறை அமைப்பாளராகவும் ஸ்ரீதரனின் இணைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.இவரிடம் குறித்த விளையாட்டு பயிற்சிக்காக சென்று சிறுவர்களில் 16 பேரை அவர் பாலியல் ரீதியாக துஸ்பிரயோத்திற்குள்ளாக்கியுள்ளார்.பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 10 தொடக்கம் 13 வயதுக்குட்டவர்கள் மலசல கூடத்திற்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியுள்ளார்.பெற்றோர் பொலிஸாரிடம் முறையிட்டதை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கபப்ட்டிருந்த நிலையில், நேற்று முன் தினம் 28 ஆம் திகதி நீதி மன்றத்தில் முற்படுத்தியிருந்தனர்.அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில் சிறுவர்களுக்கு அடித்த 4 குற்றங்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது. மேலும் ஏனைய 12 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றங்களுக்கு மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version