Home இலங்கை கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி சென்ற இ.போ.ச. பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி சென்ற இ.போ.ச. பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்

0
கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி சென்ற இ.போ.ச. பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நடத்துனர் மீது இன்று (21) காலை காலியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.கட்டுபெத்த டிப்போவைச் சேர்ந்த குறித்த பேருந்து, கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த தனியார் பேருந்தை களுத்துறையில் முந்திச் சென்றது.இதனால் ஆத்திரமடைந்த தனியார் பேருந்தின் சாரதி, அந்த நேரத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் நடத்துனரைத் தாக்க முயன்ற போதும், பேருந்தில் பயணித்த பயணிகளின் தலையீட்டால் அது தவிர்க்கப்பட்டது. இருப்பினும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து காலிக்கு சென்று பயணிகளை இறக்கிவிட்டபோது, ​​முச்சக்கர வண்டியில் வந்த தனியார் பேருந்தின் சாரதி, நடத்துனரைத் தாக்கியுள்ளார்.இதன்போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி காயமடைந்த நடத்துனரை பயணிகளுடன் தனது பேருந்தில் காலி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.அந்த நேரத்தில், பொலிஸார் தலையிட்டு காயமடைந்த நடத்துனரை சுவசேரிய நோயாளர் காவு வண்டி ஊடாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.அவர் தற்போது காலி தேசியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் வந்த பயணிகள் வேறு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் மாற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version