Home இலங்கை தவறை உணர்ந்து உடுத்துறை மீனவர்களுக்கு வலைகளை மாற்றிக் கொடுத்த வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம்

தவறை உணர்ந்து உடுத்துறை மீனவர்களுக்கு வலைகளை மாற்றிக் கொடுத்த வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம்

0
தவறை உணர்ந்து உடுத்துறை மீனவர்களுக்கு வலைகளை மாற்றிக் கொடுத்த வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம்

வடமராட்சி கிழக்கு உடுத்துறை மீனவர்களுக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் தாம் கையளித்த வலைகள் தரமற்றதென உணர்ந்து மீளப்பெற்று தரமான வலைகளை நேற்று(7)கையளித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,சில மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட தரமற்ற வலைகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் கொள்வனவு செய்து அதிக வரி விதித்ததாக கூறி உடுத்துறை மீனவர்கள் பயனாளிகளுக்கு வந்த மீன்பிடி வலைகளை திருப்பி கையளிக்க நடவடிக்கை எடுத்தனர்

2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் நிதியில் இருந்து உடுத்துறை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 41 பயனாளிகளுக்கு எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.குறித்த நிதி ஒதுக்கீட்டில் இருந்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஊடாக மீன்பிடி வலைகள் கொள்வனவு செய்யப்பட்டு கடந்த (8.01.2024) பயனாளிகளிடம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது பயனாளிகளால் வலைகள் தரமற்றவை என கூறி நிராகரிக்கப்பட்டது.பயனாளிகளின் கோரிக்கையை அடுத்து யாழ்ப்பாணம் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளாலும் பிரதேச செயலகத்தால் கொடுக்கப்பட்ட வலைகள் தரமற்றவை என உறுதிப்படுத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.ஊடகங்களிலும் இதுதொடர்பான செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்த நிலையில் தாம் கொடுத்த தரமற்ற வலைகளை மீளப்பெற்று தரம் கொண்ட 41 பயனாளிகளுக்குமான வலைகளை பிரதேச செயலகம் இன்று கையளித்தது.வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகர மூர்த்தியால் உடுத்துறை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகத்திடம் பிரதேச செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version