Home இலங்கை தாய்லாந்தின் அழகிப் போட்டியில் மகுடம் சூடிய இலங்கை சிறுமி

தாய்லாந்தின் அழகிப் போட்டியில் மகுடம் சூடிய இலங்கை சிறுமி

0
தாய்லாந்தின் அழகிப் போட்டியில் மகுடம் சூடிய இலங்கை சிறுமி

தாய்லாந்தில் நடைபெற்ற I am Model Search Kids International – 2025 அழகிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய 08 வயதான ஏஞ்சலா விமலசூரிய மகுடத்தை வென்று இன்று (26) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.உலகின் 16 நாடுகளைச் சேர்ந்த 42 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்தப் போட்டி தாய்லாந்தின் பேங்கொக்கில் கடந்த 24ஆம் திகதி நடைபெற்றது.

ஏஞ்சலா விமலசூரிய கொழும்பு, ஹெவ்லொக் பிளேஸில் வசிப்பவர், அவர் புனித லோரன்ஸ் கல்லூரியில் 04 ஆம் தரத்தில் கல்வி கற்கிறார்.இந்த வெற்றியுடன் ஏஞ்சலா தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-403 இல் இன்று (26) பிற்பகல் 11.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.அவரை வரவேற்பதற்காக அவரது பயிற்சியாளர் உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version