Home உலகம் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபா நீக்கம்

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபா நீக்கம்

0
பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபா நீக்கம்

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்குவதற்கான உத்தரவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிறப்பித்துள்ளார்.கியூபா மீது 60 ஆண்டுகளாக பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகின்றது.இந்நிலையில் டிரம்ப் ஏற்கனவே ஜனாதிபதியாக இருந்தபோது, கியூபாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் உள்வாங்கியிருந்தார்.ஈரான், சிரியா, வடகொரியா ஆகிய நாடுகளுடன் கியூபாவும் பயங்கரவாதத்துக்கு நேரடியாக ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு கியூபா மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியம், தென் அமெரிக்க நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.இந்நிலையில் பதவிக்காலம் முடிவடையவுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அந்த பட்டியலில் இருந்து கியூபாவை நீக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.எனினும் புதிதாக பதவி ஏற்கப் போகும் டிரம்ப் நிர்வாகம் இதை ஏற்காது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version