Home இலங்கை யாழ்ப்பாண நாக விகாரையில் சுற்றுலா வந்த பிக்கு சடலமாக மீட்பு

யாழ்ப்பாண நாக விகாரையில் சுற்றுலா வந்த பிக்கு சடலமாக மீட்பு

0
யாழ்ப்பாண நாக விகாரையில் சுற்றுலா வந்த பிக்கு சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பிக்கு ஒருவர் நாக விகாரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றையதினம் (1) நடைபெற்றுள்ளது.பதுளை வீதி, பசற பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர தேரர் (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
இதனையடுத்து, சில இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர் நேற்றுமுன்தினம் நாகவிகாரைக்கு சென்று அங்கு இரவு உறக்கத்திற்கு சென்றுள்ளார்.இந்நிலையில், நேற்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version