Home உலகம் ஈரானுக்கு எதிராக ராணுவ தாக்குதல்: 2 வாரங்களுக்குள் டிரம்ப் முடிவு செய்வார் – வெள்ளை மாளிகை

ஈரானுக்கு எதிராக ராணுவ தாக்குதல்: 2 வாரங்களுக்குள் டிரம்ப் முடிவு செய்வார் – வெள்ளை மாளிகை

0
ஈரானுக்கு எதிராக ராணுவ தாக்குதல்: 2 வாரங்களுக்குள் டிரம்ப் முடிவு செய்வார் - வெள்ளை மாளிகை

அணு ஆயுத உற்பத்தியை முன்வைத்து ஈரான் மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆயுத தளங்கள், ராணுவ நிலைகள் உள்பட மக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளால் தாக்கி வருகிறது.இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஈரானுக்கு எதிராக ராணுவத் தாக்குதலை நடத்துவதா.. வேண்டாமா என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவு எடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எதிர்காலத்தில் ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான கணிசமான வாய்ப்பு உள்ளது என்ற உண்மையின் அடிப்படையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஈரானுக்கு செல்லலாமா வேண்டாமா என்பது முடிவு செய்யப்படும்.ஈரானுடன் ஒரு ராஜதந்திர தீர்வுக்கு டிரம்ப் வழி திறந்திருந்தாலும், அவரது முக்கிய முன்னுரிமை அந்த நாடு அணு ஆயுதத்தைப் பெறுவதைத் தடுப்பதுதான். எந்தவொரு ஒப்பந்தமும் டெஹ்ரானால் யுரேனியம் செறிவூட்டலைத் தடை செய்ய வேண்டும் மற்றும் அணு ஆயுதங்களை உருவாக்கும் அதன் திறனைக் குறைக்க வேண்டும்.ஜனாதிபதி டிரம்ப் எப்போதும் ராஜதந்திர தீர்வில் ஆர்வமாக உள்ளார்.அவர் ஒரு அமைதியை நிலைநாட்டுபவர். அவர் வலிமை மூலம் அமைதியை ஏற்படுத்துபவர்” என்று அவர் கூறினார்.இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக வாஷிங்டனுக்கும், டெஹ்ரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version