Home இலங்கை பேலியகொடை பகுதியில் மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூடு – பொலிஸார் விசாரணை

பேலியகொடை பகுதியில் மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூடு – பொலிஸார் விசாரணை

0
பேலியகொடை பகுதியில் மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூடு – பொலிஸார் விசாரணை

கம்பஹா, பேலியகொடை, ஞானரத்ன மாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பேலியகொடை, ஞானரத்ன மாவத்தை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிச் சூட்டில் பேலியகொடை மீன் சந்தையில் பணிபுரியும் நபர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version