Home இலங்கை யாசகம், பாதுகாப்பற்ற தொழில்களில் ஈடுபடும் சிறுவர்களை தேடி பொலிஸாரால் சுற்றிவளைப்பு

யாசகம், பாதுகாப்பற்ற தொழில்களில் ஈடுபடும் சிறுவர்களை தேடி பொலிஸாரால் சுற்றிவளைப்பு

0
யாசகம், பாதுகாப்பற்ற தொழில்களில் ஈடுபடும் சிறுவர்களை தேடி பொலிஸாரால் சுற்றிவளைப்பு

யாசகம் மற்றும் பாதுகாப்பற்ற தொழில்களில் ஈடுபடும் சிறுவர்களை தேடி கடந்த வியாழக்கிழமை (19) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, யாசகம் மற்றும் பாதுகாப்பற்ற தொழில்களில் ஈடுபடும் 21 சிறுவர்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.இந்த சிறுவர்கள் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு , நுகேகொடை , கம்பஹா, பாணந்துறை, களனி, நீர்கொழும்பு, கல்கிஸ்ஸை, களுத்துறை, தங்காலை, அநுராதபுரம், கண்டி, குருணாகல், சிலாபம், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளை இலக்கு வைத்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நாடளாவிய ரீதியில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version