Home » இன்றைய ராசிபலன்கள் – 11-08-2025

இன்றைய ராசிபலன்கள் – 11-08-2025

by newsteam
0 comments
இன்றைய ராசிபலன்கள் - 11-08-2025
16

மேஷம்

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். உத்தியோகம் சம்பந்தமாக மாற்றங்கள் வருவதற்கான அறிகுறிகள் தென்படும். தொழிலில் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

ரிஷபம்

வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். தொழில் வளர்ச்சி உண்டு. குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

mc39

மிதுனம்

விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபார விரோதம் அதிகரிக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதத்தில் நடந்து கொள்வார்களா என்பது சந்தேகம் தான்.

இதையும் படியுங்கள்: இன்றைய ராசிபலன்-11 ஆகஸ்ட் 2025
கடகம்

எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த காரியமொன்று முடியாமல் போகலாம். திடீர் செலவுகளைச் சமாளிக்க அடுத்தவர்களிடம் கைமாத்து வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.

சிம்மம்

உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். வருங்காலத்திற்காக சேமிக்க முற்படுவீர்கள். அன்னிய தேசத்தில் இருந்து உத்தியோகம் சம்பந்தமாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

கன்னி

நூதனப் பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும். உடல் நலனில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும்.

துலாம்

அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் மீதியும் தொடரும். தொழில் முன்னேற்றம் உண்டு.

இதையும் படியுங்கள்: இன்றைய ராசிபலன்-11 ஆகஸ்ட் 2025
விருச்சிகம்

யோகமான நாள். உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

தனுசு

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பயணம் எதிர்பார்த்த பலனை தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.

மகரம்

பெருமைகள் சேரும் நாள். பிறர் பாராட்டும்படியான செயல் ஒன்றை செய்து முடிப்பீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வருமானம் திருப்தி தரும். கல்யாண முயற்சி வெற்றி தரும்.

கும்பம்

போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.

மீனம்

விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். நிலையான வருமானத்திற்கு வழி அமைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் தொல்லை தந்த மேலதிகாரிகள் இடமாற்றம் பெறுவர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version