இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்த இந்தியக் கடற்றொழிலாளர்கள் 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கடற்பிராந்தியத்தில் தலைமன்னார் மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளை அண்மித்த கடலில் இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.இந்தியக் கடற்றொழிலாளர்களின் 5 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.அதன்படி, தலைமன்னார் கடற்பரப்பில் 4 படகுகளுடன் 30 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் ஒரு படகுடன் 17 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களைக் கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
விசாரணைகளின் பின்னர் சட்ட நடவடிக்கைகளுக்காக, இந்தியக் கடற்றொழிலாளர்கள் 47 பேரும், கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இலங்கை கடல் எல்லை மீறி நுழைந்த 47 இந்தியக் கடற்றொழிலாளர்கள் கைது
24