Home இலங்கை ஒருவருக்கு நாளொன்றுக்கு ஏழு கிராம் உப்பு போதுமானது – அமைச்சர் வசந்த சமரசிங்க

ஒருவருக்கு நாளொன்றுக்கு ஏழு கிராம் உப்பு போதுமானது – அமைச்சர் வசந்த சமரசிங்க

0
ஒருவருக்கு நாளொன்றுக்கு ஏழு கிராம் உப்பு போதுமானது - அமைச்சர் வசந்த சமரசிங்க

ஒருவருக்கு நாளொன்றுக்கு ஏழு கிராம் உப்பு போதுமானது என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையில் நாளொன்றுக்கு 500 மெற்றிக் தொன் எடையுடைய உப்பு தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.எனவே இலங்கை, நாளொன்றுக்கு தேவையான 500 மெற்றிக் தொன் எடையுடைய உப்பை விநியோகம் செய்ய முடியாத நாடு அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாட்டில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக உப்பு உற்பத்தி வீழ்ச்சியடைந்ததாகவும் இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக உப்பினை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் போதியளவு உற்பத்தி மேற்கொள்ளப்படும் வரையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விநியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version