Home இலங்கை கிளிநொச்சி பகுதியில் ஒன்றரை வயது குழந்தைக்கு எமனாகிய தந்தையின் டிப்பர் வாகனம்

கிளிநொச்சி பகுதியில் ஒன்றரை வயது குழந்தைக்கு எமனாகிய தந்தையின் டிப்பர் வாகனம்

0
கிளிநொச்சி பகுதியில் ஒன்றரை வயது குழந்தைக்கு எமனாகிய தந்தையின் டிப்பர் வாகனம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் ஒன்றரை வயது உடைய பெண் குழந்தை ஒன்று டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளது.குறித்த சம்பவம் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.தனது வீட்டில் இருந்த ரிப்பர் வாகனத்தை தந்தை செலுத்திய போதே அதன் சில்லுகள் சிக்குண்டு குழந்தை பலியாகியுள்ளது.சம்பவ இடத்தை சென்று பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட பதில் நீதிவான் எஸ்.சிவபாலசுப்ரமணியம் உடற்கூற்று விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலதிக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version