Home இலங்கை சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் வாழைச்சேனையில் இருவர் மாயம்

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் வாழைச்சேனையில் இருவர் மாயம்

0
சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் வாழைச்சேனையில் இருவர் மாயம்

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் வாழைச்சேனையில் காணாமல் போயுள்ளனர். வாழைச்சேனை புலிப்பாஞ்சிக்கல் பகுதியில் சனிக்கிழமை (25) மாலை இரண்டு பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.சந்திவெளி பகுதியைச் சேர்ந்த 52 மற்றும் 71 வயதுடைய இருவரே காணாமல் போய்யுள்ளனர்.இந்த இருவரும் காய்கறிகளை சேகரித்துவிட்டு வயல்களில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது புலிப்பாஞ்சிகல் ஓயாவின் அடித்துச் செல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காணாமல் போன இருவரையும் கண்டுபிடிக்க வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version