Home இலங்கை செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 63 எலும்புக்கூட்டு அடையாளம் காணப்பட்டு 54 எலும்புக்கூட்டு...

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 63 எலும்புக்கூட்டு அடையாளம் காணப்பட்டு 54 எலும்புக்கூட்டு மீட்பு

0
செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 63 எலும்புக்கூட்டு அடையாளம் காணப்பட்டு 54 எலும்புக்கூட்டு மீட்பு

சுமார் 29 வருடங்களுக்கு பின்னர் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இன்றும் சில எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.அதில், ஆடைகளுடன் கூடிய சிறுமி ஒருவரின் எலும்புக்கூடும் இன்று அடையாளம் காணப்பட்டதாக, பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவிக்கின்றார். சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இன்று ஏழு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அதற்கமைய, சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 63 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அவற்றில் 54 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version