Home இலங்கை நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் போதைப்பொருட்களுடன் 543 பேர் கைது

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் போதைப்பொருட்களுடன் 543 பேர் கைது

0
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் போதைப்பொருட்களுடன் 543 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (16) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 543 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 115 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 289 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 127 பேரும், போதை மாத்திரைகளுடன் 12 பேரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 207 கிராம் 32 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 557 கிராம் 862 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 799 கிராம் 346 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 287 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version