Home இலங்கை பெரிய நீலாவணை பகுதியில் போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விநியோகித்தவர் கைது

பெரிய நீலாவணை பகுதியில் போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விநியோகித்தவர் கைது

0
பெரிய நீலாவணை பகுதியில் போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விநியோகித்தவர் கைது

போதை மாத்திரைகளை நீண்ட காலமாக இளைஞர்களுக்கு விநியோகம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில் 29 வயதான சந்தேக நபரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் நேற்று (22) இரவு அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள மருதமுனை புறநகர் பகுதியில் சோதனை முன்னெடுக்கப்பட்டது.இதன் போது சுமார் 700க்கும் அதிகமான போதை மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த 29 வயதான சந்தேக நபர் கைதானார்.மேலும் சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version