Home இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது

0
உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலை மாணவர்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களாக முன்னெடுத்து வந்த உண்ணாவிரத போராட்டமானது நேற்று (25) முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

1. விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்து

2. ⁠போராடுதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்

3. ⁠விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளையும் பாரபட்சமின்றி விசாரணை செய்

4. ⁠மாணவர்களின் கற்றலிற்கான சுதந்திரத்தை உறுதி செய்து – மாணவர்களிற்கு உடனடி நிவாரணம் வழங்கு!

உள்ளிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு கிடைக்கும் வரை உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அந்த பிரச்சினைகள் குறித்த தீர்வு வழங்குவதாக தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையினர், ஆகாரத்தை வழங்கி மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்தை நிறைவுறுத்தினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version