Home இலங்கை விசுவமடு பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்து வந்த சகோதார்கள் கைது

விசுவமடு பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்து வந்த சகோதார்கள் கைது

0
விசுவமடு பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்து வந்த சகோதார்கள் கைது

விசுவமடு புன்னைநீராவி பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரட்டை வாய்க்கால் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு சென்ற இருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் நேற்று (06) மடக்கிப் பிடித்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிஸாரினால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற இளைஞர்களை தடுத்து நிறுத்த முற்பட்டபோது தப்பிச்சென்றுள்ளனர்.

தப்பிச்சென்ற இளைஞர்களை பொலிஸார் துரத்திச்சென்று முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வைத்து 110,000 மில்லிலீற்றர் பொதி செய்யப்பட்ட சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்துள்ளனர்.அத்தோடு சட்டவிரோத மதுபானத்தை கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் விசுவமடு புன்னை நீராவி பகுதியினை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 19 மற்றும் 27 வயதுடைய சகோதரர்களாவர்.கைது செய்யப்பட்ட இருவரும் புதுக்குடியிருப்பு பொலிஸாரின் விசாரணைக்கு பின்னர் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version