Home இலங்கை வீட்டைக் காலி செய்யுங்கள் அல்லது மாதாந்த வாடகையை செலுத்துங்கள் – ஜனாதிபதி அநுர, மகிந்த ராஜபக்ஷவுக்கு...

வீட்டைக் காலி செய்யுங்கள் அல்லது மாதாந்த வாடகையை செலுத்துங்கள் – ஜனாதிபதி அநுர, மகிந்த ராஜபக்ஷவுக்கு பணித்துள்ளார்

0
ஜனாதிபதி அநுர, மகிந்த ராஜபக்ஷவுக்கு பணித்துள்ளார்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டைக் காலி செய்யுங்கள் அல்லது 4.6 மில்லியன் ரூபா மாதாந்த வாடகையை செலுத்துங்கள் என்று ஜனாதிபதி அநுர, மகிந்த ராஜபக்ஷவுக்கு பணித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களையும் அரசாங்கம் மீளப் பெற்றுக்கொள்ளும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டு வாடகைத் தொகை ரநிலத்தின் மதிப்பைத் தவிர்த்து மாதம் 4.6 மில்லியன் ரூபா. முன்னாள் ஜனாதிபதிகள் குடியிருப்பை காலி செய்யவோ அல்லது வாடகையை தாங்களே செலுத்தவோ வேண்டி உள்ளதாக அவர் கூறினார்.

“தற்போதுள்ள சட்டங்களின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வீடு அல்லது அவர்களது சம்பளத்தில் 1/3 பங்கு உரிமை உண்டு. அரசாங்கம் இப்போது இதனை 30 ஆயிரம் ரூபா ரொக்க கொடுப்பனவாக மட்டுப்படுத்தும். இது அவர்களின் சம்பளத்தில் 1/3 ஆகும்” என்று கட்டுகுருந்தவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி தெரிவித்தார்.கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகை தவிர்ந்த அனைத்து அமைச்சு பங்களாக்களும் ஹோட்டல் திட்டங்களுக்காக அல்லது வேறு பொருத்தமான பயன்பாட்டிற்காக மீளப் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version