ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் மாலைதீவு சென்று மீண்டும் நாடு திரும்பிய போது, அவருடன் சென்றிருந்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் விமான நிலைய டியூட்டிப்ரீ வணிக நிலையங்களில் சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொள்வனவு செய்ததால் இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.