யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக வெளியாகிய தகவலையடுத்து ஆலய வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.நேற்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பையடுத்து விசேட அதிரடிப் படையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ். மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, இது உண்மைக்குப் புறம்பான விடயம் எனக் குறிப்பிட்டார்.