யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொம்மைவெளி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருடன் மூவர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினர் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.இதன்போது கைதானவர்களிடம் இருந்து 15க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் 50 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.கைதானவர்கள் 18,19 மற்றும் 21 வயதுடையவர்கள் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.