Home இலங்கை யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தரின் வீட்டுக்கு வன்முறை கும்பலால் தீ வைப்பு

யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தரின் வீட்டுக்கு வன்முறை கும்பலால் தீ வைப்பு

0
யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தரின் வீட்டுக்கு வன்முறை கும்பலால் தீ வைப்பு

யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தரின் வீட்டுக்கு வன்முறை கும்பல் ஒன்று தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது.
யாழ்ப்பாண சிறைச்சாலையில் கடமையாற்றும் உத்தியோகஸ்தரின் கொழும்புத்துறையில் உள்ள வீட்டுக்குள் இன்று செவ்வாய்க்கிழமை (15) அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று , வீட்டார் உறக்கத்தில் இருந்த வேளை வீட்டின் முன் பகுதிக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.வீடு தீப்பற்றி எரிந்ததை அடுத்து , வீட்டில் உறக்கத்தில் இருந்தவர்கள் எழுந்து தீயினை அணைத்துள்ளனர். அதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version