Home » ஏறாவூர் பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் வருடாந்த சடங்கின் போது ஆடிய ஒருவர் திடிரென மயங்கிவிழுந்து உயிரிழப்பு

ஏறாவூர் பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் வருடாந்த சடங்கின் போது ஆடிய ஒருவர் திடிரென மயங்கிவிழுந்து உயிரிழப்பு

by newsteam
0 comments
ஏறாவூர் பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் வருடாந்த சடங்கின் போது ஆடிய ஒருவர் திடிரென மயங்கிவிழுந்து உயிரிழப்பு
4

மட்டக்களப்பு, ஏறாவூர் களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம் பெற்ற வருடாந்த சடங்கின் போது தெய்வம் ஆடிய ஒருவர் திடிரென மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார்.தெய்வ உருவெடுத்து ஆடிய மற்றுமொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் நேற்று (10) இரவு 9.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி சிங்காரத்தோப்பு கிராமத்திலுள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் வருடாந்த திருவிழாவான இறுதி நாள் சடங்கு சம்பவதினமான நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது.இதன் போது பக்தர்கள் ஆலயத்தினுள் தெய்வம் ஆடிக் கொண்டிருந்தபோது 37 வயதுடையவர் திடீரென மயங்கி வீழ்ந்ததையடுத்து அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து அங்கு தெய்வம் ஆடிக் கொண்டிருந்த ஒருவர் அங்கு நின்ற ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டதையடுத்து தாக்குதலை மேற்கொண்டவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version