Home இலங்கை சக ஊழியரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை

சக ஊழியரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை

0
சக ஊழியரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை

களுத்துறையில் மொரொன்துடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோனதுவ, கவடயாகொடை பிரதேசத்தில் சக ஊழியரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக மொரொன்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.இந்த கொலை சம்பவம் நேற்று திங்கட்கிழமை (30) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொலைசெய்யப்பட்டவர் புத்தளம் – லுணுவில பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஆவார். அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியருக்கும் இளைஞனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை கைதுசெய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொலைசெய்யப்பட்ட இளைஞனின் சடலம் மொரொன்துடுவ கோனதுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரொன்துடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version