Home இலங்கை யாழில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குழு கைது

யாழில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குழு கைது

0
யாழில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குழு கைது

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைச் சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் நேற்று(22) கைது செய்யப்பட்டனர்.யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் முன்னெடுக்கப்பட்ட கைது நடவடிக்கையின் போது மூன்று கூரிய வாள்களும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.உதயபுரம் பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு சகோதரர்கள் மீது இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அரியாலை நாயான்மார்கட்டையை சேர்ந்த 25,28 மற்றும் 30 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version