Home இலங்கை மீண்டும் செம்மணியில் இரண்டு சிறுவர்களின் என்புக் கூடுகள் மீட்பு

மீண்டும் செம்மணியில் இரண்டு சிறுவர்களின் என்புக் கூடுகள் மீட்பு

0
மீண்டும் செம்மணியில் இரண்டு சிறுவர்களின் என்புக் கூடுகள் மீட்பு

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்றும் இரண்டு சிறார்களின் என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல்துறை மாணவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றும் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தநிலையில் இரண்டு சிறார்களின் என்புக் கூடுகளுடன், சிறுமி ஒருவரின் ஆடை ஒன்றும் அடையாளம் காணப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணியான எஸ்.வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.இதன்படி, இதுவரையில் 42 மனித என்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 37 என்புக் கூட்டு தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version