கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் சீன நிறுவனமொன்றிலிருந்து தரமற்ற கரிம உரங்களை கப்பலில் இறக்குமதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.