Home » முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்

by newsteam
0 comments
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்
4

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து வௌியேறியுள்ளார்.கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிற்சை பிரிவிலிருந்த ரணில் விக்ரமசிங்க இன்று (29) காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார்.முன்னாள் ஜனாதிபதி வைத்தியசாலையில் இருந்து வௌியேறினாலும், மருத்துவ ஆலோசனையின்படி அவர் வீட்டிலேயே ஓய்வெடுப்பார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் ரணில் விக்ரமசிங்க வீட்டில் தங்கியிருக்கும் போது அவரது உடல்நிலையை குடும்ப வைத்தியர்கள் உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version